For Daily Alerts
Just In
சென்னையில் நாளை நிருபர்கள் உண்ணாவிரதம்
சென்னை:
தி.மு.க பேரணியின்போது அதை செய்தி சேகரிக்கச் சென்றிருந்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள்,வீடியோகிராபர்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சுதந்திர தினத்தன்றுசென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருக்க பத்திரிக்கையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிப்பதற்காக சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம்,நிருபர்கள் சங்கம், பத்திரிக்கையாளர் மன்றம் ஆகியவற்றின் கூட்டுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை மாலைநடந்தது. கூட்டத்திற்குப் பின் இந்த அமைப்புகளின் தலைவர்களான பாலசுப்ரமணியம், ரங்கராஜன், தனசேகர்ஆகியோர் விடுத்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
- பத்திரிக்கை சுதந்திரத்தைத் தடுத்த போலீஸாருக்கு இந்தக் கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது.
- சுதந்திர தினத்தன்று, பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கக் கூடாது என்று வலியுறுத்தி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் உண்ணாவிரதம் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
- பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து டி.ஜி.பி. மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோரின் பேட்டிகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தாக்குதல் தொடர்பாக விசாரிக்க 7 பத்திரிக்கையாளர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். அதன் அறிக்கை வந்தவுடன் கவர்னர், முதல்வர் மற்றும் பிரஸ் கவுன்சில் ஆகியோரிடம் புகார் கொடுக்கப்படும். அதன் பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]