காயமடைந்த போலீசாரிடம் நலம் விசாரித்தார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நடந்த திமுக பேரணியின்போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளபோலீசாரை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ஞாயிற்றுக்கிழமை சென்னையில் கருணாநிதி கைதைக் கண்டித்து திமுகவினர் பேரணி நடத்தினர். கடற்கரைகாமராஜர் சாலையிலுள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அருகே பேரணி வந்தபோது, திடீர் என வன்முறை ஏற்பட்டது.வன்முறையை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த வன்றைச் சம்பவத்தின்போது ஏராளமான போலீஸாரும் காயமடைந்தனர். அனைவரும் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து நலம்விசாரித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவுடன், சென்னை நகர காவல்துறை ஆணையர் முத்துக்கருப்பன் மற்றும் அதிகாரிகள்உடன் சென்றனர். காவலர்களிடம் நலம் விசாரித்த ஜெயலலிதா, கவலைப்படாமல் இருக்கும்படியும், விரைவில்உடல் நலம் பெற்றுத் திரும்ப ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் காவலர்களுக்காக பழங்கள் மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்களைக் கொடுத்து ஒவ்வொருவரையும்மிகவும் பரிவுடன் நலம் விசாரித்தார். பிறகு அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்களைச் சந்தித்து போலீசார்உடல் நலம் பற்றி விசாரித்ததுடன் அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.

அப்போது பேரணியின்போது என்ன நடந்தது என்பது குறித்து முதல்வரிடம் காவலர்கள் எடுத்துரைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+