கைதான 62 திமுகவினருக்கு 15 நாள் காவல்
சென்னை:
சென்னையில் நடந்த திமுக பேரணியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்ட திமுகவினர் 62 பேரும் நேற்று கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியைக் கைது செய்ததைக் கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திமுக சார்பில்கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.
பேரணியின் முடிவில் போலீசாருக்கும் திமுக தொண்டர்களுக்குமிடையே கடும் மோதல் உருவானது. அதில் 4 திமுகதொண்டர்கள் பலியானார்கள். மேலும் பல போலீசாருக்கும், திமுகவினருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பெதுசொத்தை சேதப்படுத்தியதாகவும், போலீசாரைத் தாக்கியதாகவும் 62 திமுகவினர் மீதுகோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்கள் அனைவரையும் சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
பிறகு, அவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது.