புலிகள் தாக்குதலில் சேதமடைந்த 6 விமானங்கள் மீண்டும் பறக்க தயார்
கொழும்பு:
விடுதலைப் புலிகளால் சேதப்படுத்தப்பட்ட 11 போர் விமானங்களில் 6 விமானங்கள் சீர் செய்யப்பட்டு பறக்கும் நிலைக்குகொண்டுவரப்பட்டுவிட்டன என பாதூப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதையடுத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாட்டு விமானவியல் நிபுணர்களின் உதவியுடன் இந்த விமானங்கள் சீரமைப்புப்பணியை இலங்கை மேற்கொண்டது. இதில் 6 விமானங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 விமானங்கள் படுமோசமாகதாக்கப்பட்டுள்ளதால், அவற்றை சரி செய்யும் பணி தொடர்ந்து நடத்திறது.
வன்னிக் காட்டில்...
இதற்கிடையே யாழ்பாணத்திலும், வன்னி காட்டுபகுதியிலும் நடந்த இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் 5 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர். இதில் 2 பேர் பெண் புலிகள்.
வன்னியில் இரணி இலுப்பங்குலம் என்ற இடத்தில் 3 புலிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
அதே போல யாழ்பாணத்தில் எலுத்தமடுவில் என்ற இடத்தில் 2 பெண் புலிகள் ராணுவத்துடன் நடந்த சண்டையில்கொல்லப்பட்டனர்.
விமானங்கள் குண்டு வீச்சு:
யானைஇரவுக்கு அருகே உள்ள சொரம்பெட்டு என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் இருப்பிடங்கள் மீது இலங்கைராணுவ விமானங்கள் திங்கள்கிழமை குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தின.












Click it and Unblock the Notifications