டான்சி வழக்கு: ஜெ. அப்பீல் மீது இன்று விசாரணை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் அப்பீல் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. நேற்று(திங்கள்கிழமை) விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட இந்த வழக்கு வக்கீல்கள் போராட்டம் காரணமாகதள்ளிவைக்கப்பட்டது.
2 ஆண்டுகளுக்குமேல் சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட் முடியாது என்று சட்டத்தில் உள்ளது.இதனால் ஜெயலலிதா கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
ஆனால் முதல்வராகப் பதவியேற்ற தினத்திலிருந்து 6 மாதத்திற்குள் ஜெயலலிதா ஏதாவது ஒரு தொகுதியில்போட்டியிட்டு வெற்றிபெறவேண்டும்.
அதாவது வரும் நவம்பர் 13 -ம் தேதிக்குள் போட்டியிட்டு வெற்றிபெற்றாக வேண்டும்.
இதனால் தன் மீதான டான்சி ஊழல் வழக்கை விரைவாக விசாரிக்கும்படி ஐகோர்ட்டில் ஜெயலலிதா அப்பீல்மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுமீதான விசாரணை திங்கள்கிழமை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட புதிய சட்டம் தொடர்பாக நேற்று வக்கீல்கள் கோர்ட்புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில் நீதிபதி பாலசுப்ரமணியன் முன்பு நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்துஜெயலலிதாவின் வக்கீல் ஜோதி ஆஜராகி வக்கீல்கள் போராட்டம் காரணமாக அரசு வக்கீல் வெங்கடபதிஆஜராகமுடியாத காரணத்தால் விசாரணையை வெவ்வாய்கிழமைக்கு (இன்று) தள்ளிவைக்கும்படிகேட்டுக்கொண்டார்.
இதனால் வழக்கு தொடர்பாக பதிவாளர் அலுவலகம்தான் முடிவுசெய்யும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று மாலை ஐகோர்ட் அதிகாரி ஒருவர் கூறுகையில், "டான்சி வழக்கு செவ்வாய்கிழமைவிசாரணைக்கு வரும்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications