இன்று கொடியேற்றுகிறார் ஜெ
சென்னை:
இந்தியத் திரு நாட்டின் 55 -வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னைகோட்டையில் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
அதன்பிறகு, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். அதைத் தொடர்ந்து கோட்டைகொத்தளத்திலுள்ள கொடி மேடைக்குச் சென்று தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்துகிறார்.
பிறகு சாதனைபுரிந்த ராணுவ வீரர்களுக்கு முதலைமைச்சர் வீர விருது மற்றும் ரொக்கத் தொகைகளை வழங்குகிறார்.
இன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள சுதந்திரதின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
தாய்த்திருநாட்டின் சுதந்திரதினத் தன்று அனைத்து இந்திய மக்களுக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திரதினநல்வாழ்த்துக்களைத் தெரித்துக் கொள்கிறேன்.
அந்நியர்களை விரட்டியடித்து நம் தாய்நாட்டை நமக்குப் பெற்றுததந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்க என்நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.
தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்கவேண்டும் என்ற மிகப்பெரிய பொருப்பினைவழங்கியுள்ள தமிழக மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் வளர்ச்சிப் பணிகளை முனைப்புடன்செயல்படுத்துவேன் என்று உறுதிகூறுகிறேன்.
இவ்வாறு முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications