சுதந்திர தின பேச்சு: மத்திய அரசுக்கு ஜெ. சூடு
சென்னை:
தமிழக சட்டசபை, தலைமைச் செயலகம் அமைந்துள்ள சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாதேசியக் கொடியேற்றினார்.
தேசிய ஒருமைப்பாட்டை கட்டிக் காக்க வேண்டிய அவசியத்தை நான் உணர்ந்திருக்கிறேன். அதே போலகூட்டாட்சியின் தத்துவத்தையும் நான் மதிக்கிறேன். ஆனால், அதே நேரத்தில் மாநிலத்தின் உரிமைகளுக்காகதொடர்ந்து குரல் கொடுப்பேன்.
இதற்காக மத்திய அரசுடன் போராடவும் தயாராக இருக்கிறேன். கூட்டாட்சி (பெடரலிசம்), மதசார்பின்மை,ஜனநாயகம் ஆகிய மூன்றும் தான் இந்த நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்கும் 3 தூண்கள். இதில் ஒன்றுபாதிக்கப்பட்டாலும் மற்ற இரண்டும் பாதிக்கப்படும். இந்த மூன்றையும் காக்க வேண்டியது மத்திய, மாநிலஅரசுகளின் கடமை.
மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தங்களின் வசதிக்காக கூட்டாட்சித் தத்துவத்தை வளைத்துக் கொள்ளக் கூடாது.யார் ஆட்சியில் இருந்தாலும் சரி பெடரலிசம் பேணப்பட வேண்டும். மாநில அரசுகளின் உரிமைகள் காக்கப்படவேண்டும்.
மாநில அரசுகள் மீது மத்திய அரசு வெறுப்பையும், கோபத்தையும் காட்டாமல் நடந்து கொண்டால் தான்மத்திய-மாநில அரசுகளிடையே மோதலுக்கு இடம் இருக்காது. இல்லாவிட்டால் பிரச்சனை தான்.
எம்.ஜி.ஆர். சொன்னதை நான் இங்கு மீண்டும் நினைவூட்டுகிறேன். மாநில அரசுகள் மத்திய அரசை சார்ந்துவாழவில்லை, அதே நேரம் சுதந்திரமாகவும் வாழவில்லை, ஒருவர் மீது ஒருவர் சார்ந்து வாழ்கிறோம்.
இதை எல்லோரும் உணர்ந்து கொள்வது நல்லது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications