மலேசியாவில் 7 தமிழர்கள் படுகொலை: 2 பேர் கைது
கோலாலம்பூர்:
மலேசியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, 2வங்கதேசத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 நாட்களுக்கு முன்னர், பெருமாளின் வீட்டிலிருந்து எந்தவிதமான பேச்சுக் குரலும் கேட்காமல், வீடும் நீண்டநேரமாகப் பூட்டிக் கிடந்தது. சந்தேகப்பட்ட பக்கத்து வீட்டினர் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து, பூட்டை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பெருமாள் உள்பட வீட்டிலிருந்தஅனைவருமே கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக நடந்த விசாரணையின் அடிப்படையில், முகம்மது மசூத் ராணா (27) மற்றும் ரஸூல்கரீம் (32) என்ற வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக மலேசியாவில் குடியேறிய இந்த 2 பேரும், அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துவந்தது தெரிய வந்தது. இந்த 2 பேரிடமும் வரும் 23ம் தேதி கொலை சம்பந்தமான விசாரணை துவங்குகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்த 2 பேருக்கும் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.