For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேளச்சேரியில் தொடரும் கொலைகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை வேளச்சேரியில் கார் மெக்கானிக் படுகொலை செய்யப்பட்டார்.

சென்னையில் தரமணி-வேளச்சேரி இணைப்புச் சாலையில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் சேகர். இவர் ஒருகார் மெக்கானிக். தரமணி 100 அடி சாலையில் மெக்கானிக் கடை வைத்திருந்தார்.

இவர் ரங்கநாதன் என்பவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தார். தொழில் தொடர்பாகஇருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் இருவரும் பிரிந்து போய் தனியாகதொழில் செய்து வந்தனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் சேகர் தனது கடையில் இருக்கும்போது ஒரு கும்பல் அங்குவந்தது. கடைக்குள் புகுந்த அக்கும்பல் சேகரை சரமாரியாக அரிவாள்களால் வெட்டித்தள்ளியது. இதில் சேகர்துடிதுடித்து இறந்தார்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த வேளச்சேரி போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சேகர்கடையில் வேலை பார்த்து வந்த பூவேந்தன் என்ற சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொலை தொடர்பாக ரங்தநாதன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வேளச்சேரி பகுதியில் கொலைகள் நடப்பது புதிதல்ல. சமீபத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார்.கள்ளக்காதல் தொடர்பாக இந்தக் கொலை நடந்ததாகத் தெரிகிறது. இப்பகுதியில் அடிக்கடி கொலைகள் நடப்பதுவாடிக்கையாகி விட்டதால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X