இன்று பத்திரிக்கையாளர்கள் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக நடத்திய பேரணியின்போது பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து,சென்னையில் புதன்கிழமை காலை முதல் மாலை வரை பத்திரிக்கையாளர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

திமுக பேரணியின்போது வெடித்த திடீர் வன்முறையை அடக்க போலீஸார் தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சுமற்றும் துப்பாக்கிச்சூட்டை நடத்தினர்.

இதில் போலசாரின் தாக்குதலில் சிக்கி பல செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோகிராபர்கள்காயமடைந்தனர். அவர்களில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீஸ் தாக்குதலைக் கண்டித்து பத்திரிக்கையாளர்கள் புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரைஉண்ணாவிரதம் இருக்கின்றனர். சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடக்கிறது. இதில் அனைத்துப் பத்திரிக்கையாளர்களும் பங்கேற்கின்றனர்.

போலீஸ் துறை செய்திகளைப் புறக்கணிக்கவும், டி.ஜி.பி. ரவீந்திரநாத் மற்றும் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன்ஆகியோர் ஏற்பாடு செய்யும் பிரஸ் மீட்டைப் புறக்கணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக கவர்னர்ரங்கராஜன், முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரஸ் கவுன்சில் ஆகியோரிடம் மனு கொடுக்கவும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

பத்திரிக்கையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து அப்பகுதியில் மிகுந்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+