இந்தியா வருகிறார் ஜார்ஜ் புஷ்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார்.
வரும் ஆண்டு ஏப்ரலுக்குள் புஷ் இந்தியப் பயணத்தை மேற்கொள்வார். பயணத்துக்கான தேதிகள் குறித்து இந்தியஅதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.
இந்திய-அமெரிக்க உறவை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்லவும் புஷ் ஆர்வம் காட்டுகிறார். பொருளாதாரஉறவு மட்டுமின்றி இரு நாடுகளும் இணைந்து புதிய உலகளாவிய சக்தியாக உருவெடுக்க வேண்டுமென புஷ்விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறினர்.
அணு குண்டு சோதனையை அடுத்து இந்தியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார கட்டுப்பாடுகளை முழுமையாகநீக்கவும் புஷ் முடிவு செய்துள்ளார். அடுத்த மாதம் இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications