சட்டசபை மரபு மீறப்பட்டது - அன்பழகன் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை சைதாப்பேட்டை தொகுதி திமுக உறுப்பினர் மற்றும் 2 முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டசபையில்இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் மரபு மீறல் நடந்துள்ளதாக சட்டசபை திமுக எதிர்க்கட்சித்தலைவர் க.அன்பழகன் கூறியுள்ளார்.

சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழக்கிழமை கூடியது. இதில் திமுக எம்.எல்.ஏ. வை.பெருமாள் மற்றும்முன்னாள் உறுப்பினர்கள் சங்கரன், முத்துச்சாமி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஆசபாநாயகர் காளிமுத்து இரங்கல் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். பின்னர் தீர்மானத்தை அவரே வாசித்துதீர்மானத்தை நிறைவேற்றினார்.

இதுகுறித்து அன்பழகன் புகார் கூறியுள்ளார். சட்டசபைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர்செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வழக்கமாக ஒரு உறுப்பினர் இறந்து விட்டால் அதுதொடர்பாக சபையில் அவை முன்னவர் இரங்கல்தீர்மானத்தைக் கொண்டு வருவார். பின்னர் அந்தத் தீர்மானம் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும்பேசுவார்கள், பின்னர் முதல்வர் பேசுவார்.

அதன் பிறகு தீர்மானத்தின் மீது இறுதியாக சபாநாயகர் பேசி அது நிறைவேற்றப்படும். இதுதான் நடைமுறை.

ஆனால் தற்போது இந்த மரபு மீறப்பட்டுள்ளது. சபாநாயகர் அனைவரையும் எழுந்து நிற்கச் சொன்னார். பிறகுஉறுப்பினர் பெருமாள் இறந்தததற்கு 2 நமடம் மவுன அஞ்சலி செலுத்தும்படி கூறினார்.

பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டது. திரு பெருமாள் எந்தக்கட்சியைச் சார்ந்துள்ளாரோ அந்தக்கட்சியின்உறுப்பினர்கள் உட்பட, எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கூட இது பற்றிப் பேச அனுமதிக்கப்படவில்லை.

எதிர்கட்சி உறுப்பினர் பெருமாள் மறைந்துள்ள நிலையில் எங்களுடைய உணர்வுகளைப் பேசி சட்டசபையில்பதிவுசெய்ய அனுமதிக்கப்படவில்லை. இது எதிர்கட்சி உறுப்பினர்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது. இதைநாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார் அன்பழகன்.

அதிமுக அரசு சட்டசபை விதிகளை இவ்வாறு தொடர்ந்து மீறிவந்தால், நாங்கள் எங்கள் கட்சி உறுப்பினர்களைக்கலந்து ஆலோசித்து இது பற்றி ஒரு முடிவு எடுப்போம் என்றும் அவர் கூறினார்.

கருணாநிதி கருத்து:

இதுபற்றித் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கூறியதாவது:

சட்டசபையில் உறுப்பினர் பெருமாளின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அனைத்துக்கட்சிஉறுப்பினர்களையும் அதுகுறித்து பேச அனுமதிக்காதது மரபுமீறிய செயல் ஆகும். இது கண்டிக்கத் தக்கது.

இதுவரை தமிழக சட்டசபை வரலாற்றில் எப்போதும் இவ்வாறு நடந்ததில்லை. மேலும், உறுப்பினர்இறந்ததற்காகபட்ஜெட் தாக்கல் செய்யாமல் சபையை ஒத்திவைத்தது தேவையற்றது. அஞ்சலி செலுத்திய பிறகு, பட்ஜெட்டைத்தாக்கல் செய்திருக்கலாம் என்று கருணாநிதி கூறினார்.

மேலும், தமிழகத்தில் பொதுஇடங்களில் புகைபிடிப்பதை தடைசெய்ய முடிவெடுத்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதாஅறிவித்திருப்பது பற்றி கருணாநிதியிடம் கேட்டதற்கு, அது பாராட்டுக்குரிய முடிவுதான் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+