மூடப்பட்டன ஏர்வாடி மன நலக் காப்பகங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் உள்ள மன நலக் காப்பகங்கள் அனைத்தும் புதன்கிழமையுடன்மூடப்பட்டன. அங்கிருந்த 706 மன நோயாளிகளும் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர்.

ஏர்வாடியில் உள்ள பாதுஷா மன நலக் காப்பகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீவிபத்தில் 28 பேர் கருகிஉயிரிழந்தனர். இதையடுத்து ஏர்வாடியில் உள்ள மன நலக் காப்பகங்களை மூடி விட பல்வேறு தரப்பிலிருந்துகோரிக்கை எழுந்தது. இதனால், அனைத்து மன நலக் காப்பகங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து புதன்கிழமை அனைத்து மன நலக் காப்பகங்களும் மூடப்பட்டன. அங்கிருந்த 706 மனநோயாளிகள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகின்றனர். இதற்காக பஸ்கள்மூலம் புதன்கிழமை இரவு அவர்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

இவர்களை மருத்துவர்களின் சான்றிதழ்கள் அடிப்படையில் சென்னைக்கு மாற்றம் செய்ய ராமநாதபுரம் மாவட்டமுதன்மை செஷன்ஸ் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+