For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

17 தமிழக போலீசாருக்கு ஜனாதிபதி விருது

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

காவல்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக தமிழகத்தைச் சேர்ந்த 17 போலீசாருக்கு ஜனாதிபதி விருதுவழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் நேற்று (புதன்கிழமை) சுதந்திரதினவிழாவில் வெளியிட்டார்.

சுதந்திரதின விழாவையொட்டி ஆண்டுதோறும் சிறந்த சேவை புரிந்த போலீசாருக்கு விருதுகளும், பதக்கங்களும்வழங்கப்படுகிறது.

இதில் சிறந்த சேவை புரிந்தமைக்காக சென்னை ரகசிய புலனாய்வு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.வெங்கடகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்படுகிறது.

இவர் 1974 -ம் ஆண்டு முதல் கோபிசெட்டிபாளையம், ராமநாதபுரம் மற்றும் மதுரை போன்ற இடங்களில் சிறப்பாகபணியாற்றிய ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார்.

இவரைத் தவிர, மேலும் 16 பேர் போலீஸ் பதக்கம் பெறுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:

1. எஸ்.ஆவுடையப்பன், சென்னை

2. டி.ராமச்சந்திரன், சென்னை

3. எஸ்.துரைராஜ், ஆவடி

4. பட்டாபி, மதுரை

5. ஆர்.சண்முகம், சென்னை

6. எம்.ஜெய் அரமன், மதுரை

7. பரமானந்தம், தர்மபுரி

8. ஜி.முனுசாமி, ஆவடி

9. கே.ராஜேந்திரன், தஞ்சை

10. கே.மாறன், திருவண்ணாமலை மாவட்டம்

11. எம்.ஜெயப்பிரகாஷ், மணலி

12. வி.கே.கோவிந்த பனிக்கர், திருச்சி

13. ஜே.ஐ.ஜோசப், அரக்கோணம்

14. பி.பி.சங்கர், சென்னை

15. கே.மாதவமூர்த்தி, சென்னை

16. டி.ஆர்.ராமச்சந்திரன், சென்னை

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X