பாங்காக்கில் விபசாரம்: 13 இந்திய பெண்கள் கைது
பாங்காக்:
சீனாவின் பாங்காக் நகரில் விபசாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 13 இந்தியப் பெண்களை பாங்காக்போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைத்த ஒரு தகவலின் அடிப்படயிைல் பாங்காக்கின் யோவாராட் மாவட்டத்தில் உள்ள ஒருஒட்டலில் அதிரடி ரெய்ட் நடத்தப்பட்டது. அப்போது விபசாரத்தில் ஈடுபட்டிருந்த சந்தேகத்தின் அடிப்படையில் 13பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிவர்கள் சட்டத்திற்கு புறம்பான சம்பவத்தில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. யோவார்டுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து குடி பெயர்ந்தவர்கள்மற்றும் தொழிலதிபர்கள் அடிக்கடி வருவது வழக்கம்.
கைது செய்யப்பட்ட பெண்கள் இவர்களுடன் விபசாரத்தில் ஈடுபட்டிருக்ககூடும் என்ற சந்தேகம் உள்ளது. இந்தபெண்கள் அனைவரும் இந்தியாவின் கிழக்கு பகுதியான கோல்கத்தா, அலகாபாத் நகரங்களைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள்என்றார்.
இது குறித்து பாங்காக்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரி கூறுகையில், யோவார்ட்டில் இது போன்ற சம்பவங்கள்நடந்து வருவதாக புகார்கள் வந்தன. ஆனாலும் இப்போதுதான் முதல் முதலாக விபசார செய்ததகாக சந்தேகப்பட்டுஇந்தியாவைச் சேர்ந்த 13 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications