ஏசுவாக சித்தரித்து கட்-அவுட் வைத்தது எனக்குத் தெரியாது - கருணாநிதி
சென்னை:
ஏசு சிலுவையைச் சுமப்பதையும் நான் கைது செய்யப்பட்டதையும் ஒப்பிட்டு திமுகவினர் வைத்த கட்- அவுட் பற்றிஎனக்கு முன்பே தெரியவில்லை. ஆனால், தெரியவந்தவுடன் அதை அகற்றச் சொல்லிவிட்டேன் என்று முன்னாள்முதல்வர் கருணாநிதி கூறினார்.
அதில் திமுகவின் பல்வேறு பிரிவைச் சார்ந்தவர்களும் தங்கள் தலைவரைப் புகழ்ந்தும், போலீசாரைத் தாக்கியும்பலவிதடான கட் - அவுட்களை வைத்திருந்தார்கள்.
அவற்றில் ஒன்றுதான் கருணாநிதியையும் இயேசுபிரானையும் ஒப்பிடுவது போல வரையப்பட்டிருந்தது.
அதில் ஒருபாதியில் இயேசு சிலுவையைச்சுமந்து வரும்போது அவருடன் யூதர்கள் வருவதுபோல இருந்தது.மற்றொரு பாதியில் கருணாநிதி கைது செய்யப்பட்டு, போலீசாரால் இழுத்துச் செல்வது போல இருந்தது.
இதைக்கண்டவுடன் கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து கருணாநிதியிடம் நேற்று நிருபர்கள் கேட்டதற்கு, எனக்கு தெரியாமல், என் விருப்பத்திற்கு மாறாகஅந்த கட்-அவுட் வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி அறிந்தவுடன் அதைநான் அகற்றச் சொல்லிவிட்டேன். ஒருஇடத்தில் தான் அப்படி நடந்திருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவைக் கன்னிமேரியாக சித்தரித்து பல போஸ்டர் வெளியிடப்பட்டதுஉங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் என்றார்.
மேலும், பேரணியில் செய்தி சேகரிக்க வந்த நிருபர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, நிருபர்கள் சுதந்திரநாளில் கூடஉண்ணாவிரதம் இருக்கும் நிலை உருவாகி உள்ளது.
நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் அதை பலமுறை வன்மையாக கண்டித்திருக்கிறேன் என்றார்.