For Daily Alerts
Just In
ஜனநாயக முறைப்படி சட்டசபையில் கலந்து கொள்வோம்: கருணாநிதி
சென்னை:
ஜனநாயக முறைப்படி சட்டசபையில் கலந்து கொண்டு, சட்டசபைக் கடமைகளை திமுக நிறைவேற்றும் என்றுஅக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
17ம் தேதி திமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின்போது,திமுகவின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பது பற்றி, அந்தக் கூட்டத்தின் போது முடிவெடுக்கப்படும்.
எப்போதும் போலவே, ஜனநாயக முறைப்படி, இந்தக் கூட்டத்தொடரிலும் திமுக கலந்து கொண்டு, சட்டசபைக்கடமைகளை நிறைவேற்றும் என்றார் கருணாநிதி.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]