For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசுப் பணிக்கு ராஜகோபாலனை மட்டும் விடுவிக்கிறார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடிதத்துக்கு மேல் கடிதமாக எழுதிக் கொண்டிருக்கும் மத்திய அரசைத் திருப்திப் படுத்துவதற்காக, கறுப்புப் பூனைப்படைக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகோபாலனை மட்டும் தமிழக அரசு அனுப்பி வைக்கும் என்றுகூறப்படுகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்திலும், மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்பாலு கைது செய்யப்பட்ட சம்பவத்திலும் தொடர்புடையதாக கூறப்படும் சென்னை கமிஷனர் முத்துக்கருப்பன்உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு தமிழகஅரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி மாற்றம்செய்வதில் மத்திய அரசு சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வதாக கூறியிருந்தார்.

ஐ.பி.எஸ்.அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்புவது குறித்த முடிவை தமிழக அரசு வியாழக்கிழமைக்குள்அறிவிக்க வேண்டும் என்று மத்திய கெடு விதித்துள்ளது.

தற்போது போலீஸ் பயிற்சி கல்லூரியில் பணிபுரியும் ராஜகோபாலனை மட்டும், தேசிய பாதுகாப்பு படையான"கறுப்பு பூனைப் படை" பணிக்கு அனுப்ப ஜெயலலிதா ஒப்புக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

ராஜகோபாலன் கறுப்பு பூனைப் படையின் டைரக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கறுப்பு பூனைப் படைக்கு கடந்த 6மாத காலமாக முழு நேர டைரக்டர் யாரும் இல்லை. ராஜகோபாலனை அனுப்புவதற்கும் முதலில் ஜெயலலிதாமறுத்து வந்தார்.

இந்நிலையில், கருணாநிதி மற்றும 2 மத்திய அமைச்சர்கள் கைது சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 3ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தாவிடடால்,ராஜகோபாலனை தேசிய பாதுகாப்பு படையின் டைரக்டர் பணிக்கு அனுப்பி வைக்க ஜெயலலிதா தயாராகஇருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆனாலும், ஜெயலலிதா தனது உறுதியான முடிவை வியாழக்கிழமை நிருபர்கள் கூட்டத்தில் அறிவிப்பார் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X