மரபு மீறப்படவில்லை - சபாநாயகர் காளிமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இதற்கிடையே மரபு மீறல் எதுவும் நடைபெறவில்லை என்று சபாநாயகர் டாக்டர் காளிமுத்துவிளக்கமளித்துள்ளார்.

மறைந்த திமுக எம்.எல்.ஏவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுஒத்திவைக்கப்பட்டது. இறந்த எம்.எல்.ஏ. பற்றிப் பேசுவதற்கு சபை அனுமதியளிக்காததால், இதை மரபு மீறியசெயல் என்று சட்டசபை திமுக தலைவர் அன்பழகன் கூறியிருந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

சட்டசபையில் சபாநாயகரே இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்றுவது ஒன்றும் புதிதல்ல. சபையில்இரங்கல் தீர்மானம் கொண்டு வருவதற்கு இரண்டு மரபுகள் உள்ளன.

ஒன்று, அவை முன்னவர் இரங்கல் தீர்மானத்தைக் கொண்டு வந்து, உறுப்பினர்கள் பேசிய பின் தீர்மானத்தைநிறைவேற்றுவது. மற்றொன்று, சபாநாயகரே தீர்மானத்தைக் கொண்டுவந்து, அதை நிறைவேற்றுவது.

இதில் இரண்டாவது மரபுதான் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது இவ்வாறு நடந்துள்ளது.

அப்போது சேலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த நல்லமுத்து என்பவர் மரணமடைந்தார். இதற்குஇரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை அப்போதைய சபாநாயகர் ஆதித்தனார் கொண்டுவந்து, அவரே அதைநிறைவேற்றினார். பிறகு சபையையும் ஒத்திவைத்தார்.

எனவே, மரபு மீறல் எதுவும் தற்போது நடக்கவில்லை.

மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் மறைவையடுத்து பட்ஜெட் தாக்கலையே ஒத்திவைக்க அரசு முடிவுசெய்துள்ளது. இது சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாகும்.

பெருந்தன்மையோடு முதல்வர் இந்த முடிவைஎடுத்துள்ளார். இதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன் என்றார் காளிமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+