காட்பாடியில் வெடிவிபத்து: 26 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

காட்பாடி:

காட்பாடியில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் அரசு ஆலையில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பெரும்வெடிவிபத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை 4 உடல்கள் தான் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உடலகளைமீட்கும் பணி நடக்கிறது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது ஆலைக்குள் 30க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாகத் தெரிகிறது. இவர்களில்யாரும் இன்னும் உயிருடன் வெளியில் வரவில்லை. எனவே, கிட்டத்தட்ட 30 பேர் இந்தச் சம்பவத்தில் பலியாகிஇருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ளது காட்பாடி. சென்னையில் இருந்து 110 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நகரில் அரசுக்குச்சொந்தமான தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு தான் இன்று காலை 9.30க்கு அங்கு பயங்கரவெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

இந்த ஆலையில் வெடிகுண்டுகளுக்குத் தேவைப்படும் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர,வெடி குண்டுகளுக்குத் தேவைப்படும் நைட்ரேட்டுகள், ஜெலாட்டின் குச்சிகள், குண்டுகளை இயக்கச் செய்யும்டெடோனேட்டர்கள், டெடோனேட்டஸ் பீயூஸ்கள் ஆகியவையும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சுரங்கம் தோண்ட, பாறைகளை உடைக்க உதவும் வெடி பொருள்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும்பல தொழிற்சாலைகளுக்குத் தேவையான ரசாயனப் பொருள்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இவை எல்லாமே விரைவில் தீ பிடித்துக் கொள்ளும் ரகத்தைச் சேர்ந்தவை.

காலையில் நடந்த வெடி விபத்தையடுத்து ஆலையிலும் அதை ஒட்டியுள்ள கிடங்கிலும் தீ பரவியது. உள்ளே வெடிபொருள்கள் வெடித்துச் சிதறின.

இன்னும் தீ எரிந்து கொண்டுள்ளது. இதனால் உடல்களை மீட்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையின் யூனிட் 302 என்ற பிரிவில் தான் வெடி விபத்து நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+