For Daily Alerts
Just In
பேரணி வன்முறை: 139 திமுகவினர் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
சென்னை:
சென்னையில் தி.மு.க சார்பில் நடந்த பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள139 தி.மு.க தொண்டர்கள் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைவிசாரிக்கப்படவுள்ளது.
வன்முறை தொடர்பாக 139 தி.மு.க தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இந்த மனுமீதான விசாரணை நீதிபதி அசோக்குமார் முன்பு வெள்ளிக்கிழமை வருகிறது.
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]