For Daily Alerts
Just In
29 உடல்கள் மீட்பு
காட்பாடி:
வெடிவிபத்து நடந்த காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலையின் இடிபாடுகளிலிருந்து இதுவரை 29 உடல்கள்மீட்கப்பட்டுள்ளன.
பல கி.மீ. தூரத்திற்கும் இந்த வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த வெடிவிபத்தில் 27பேர் பலியானதாக நேற்றைய தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், நேற்றிரவு மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, இதுவரை மொத்தம் 29 உடல்கள்மீட்கப்பட்டுள்ளன.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இடிந்த கட்டடங்களைப் போல, வெடிவிபத்து நடந்த அந்தத் தொழிற்சாலை முழுவதும்இடிந்து மண்ணோடு மண்ணாகக் காணப்பட்டது.
சில வெடிகுண்டுகள் தவறுதலாகக் கீழே விழுந்ததால், இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனாலும், உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]