For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிருபர்களை தாக்க உத்தரவிடவில்லை: கூடுதல் டி.ஜி.பி.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தி.மு.க. பேரணியின் போது பத்திரிக்கையாளர்களை தாக்குமாறு நான் உத்தரவிடவில்லை என்று புலான்ய்வுத் துறைகூடுதல் டி.ஜி.பி. வெங்கடகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் தி.மு.க.சார்பில் கண்டன பேரணியில் கலவரம் நடந்த போது, அதைஅடக்க போலீசார் தடியடியும், கண்ணீர் புகைகுண்டும், துப்பாக்கிச் சூடும் நடத்த்தினர். இதில் பல நிருபர்களுக்குகாயம் ஏற்பட்டது.

போலீசார் தங்கள் மேல் நடத்திய தாக்குதலுக்கு பத்திரிக்கையாளர்ககள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இத்தாக்குதலைக் கண்டித்து, சுதந்திர தினத்தன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் உண்ணாவிரதம் கூடஇருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் கூடுதல் புலனாய்வுத் துறை கூடுதல் டி.ஜி.பி. வெங்கடகிருஷ்ணன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:

தி.மு.க. பேரணியில் ஏற்பட்ட கலவரத்தின் போது காயமடைந்த பத்திரிக்கை நண்பர்களுக்கு என் ஆறுதலைதெரிவித்துக் கொள்கிறேன்.

கலவரம் நடந்தபோது, காயமடைந்து பயந்துபோய் நின்று கொண்டிருந்த பத்திரிக்கை நண்பர்களைஇன்ஸ்பெக்டர்கள் பூபாலன், சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் கட்டுப்பாட்டு அறைக்கு பத்திரமாக அழைத்து வந்துகாயங்களுக்கு மருந்து போட்டு முதலுதவி செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உளவுத்துறையைச் சேர்ந்த டி.ஜி.பியான ராஜேந்திரன்,கண்காணிப்பாளர் தாமரைக் கண்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோரிடம் காயம் பட்டவர்களைமருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அந்தஆம்புலனஸ் வரும் வழியிலேயே தாக்கப்பட்டு உடைக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறைக்குசொந்தமான மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த பத்திரிக்கையாளர்கள் அரசு பொது மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.

பத்திரிக்கையாளர்களை தாக்கும்படி நான் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றுவெங்கடகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X