குடியாத்தம் அருகே அணையில் குளித்த 4 பேர் பலி
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணையில் குளித்த 4 வாலிபர்கள் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கிபரிதாபமாக இறந்தார்கள்.
இவரது மகன்கள் அயாத்பாஷா மற்றும் அன்வர் பாஷா. மேலும் அல்லா பாஷாவின் பேரன் சிக்கந்தர் மற்றும்அவரது நண்பர் அஜீஸ். இவர்கள் 4 பேரும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்கும் தொழிலைச் செய்துவந்தனர்.
கடந்த புதன்கிழமை இவர்கள் 4 பேரும் மோர்தானா அணையைச் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர்.
அப்போது அந்த அணையில் உள்ள சிறுசிறு குட்டைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்தக் குட்டைகள் ஆழம்இல்லாமல் இருந்ததால் 4 பேரும் அதில் தாவிக்குதித்து குளித்தனர்.
பிறகு மற்றொரு குட்டையில் சிக்கந்தர் என்ற இளைஞர் குதிக்கும் போது அது ஆழம் அதிகமாக இருந்தது.சிக்கந்தருக்கு நீச்சல் தெரியாது எனவே அவர் நீரில் தத்தளத்துக் கொண்டிருந்தார்.
அவரைக் காப்பாற்றுகிறேன் என்று மற்ற 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே குதித்தனர். ஆனால் அவர்கள் 4பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் அனைவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் போலீசார் விரைந்து வந்து 4 உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications