For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாக்பூர் நிபுணர் விசாரணையைத் தொடங்கினார்

By Staff
Google Oneindia Tamil News

காட்பாடி:

காட்பாடி வெடிவிபத்திற்கான உண்மையான காரணத்தை அறிவதற்காக, நாக்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டநிபுணர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை தன்னுடைய விசாரணையைத் தொடங்கினார்.

மீட்புப் பணியில் ஏற்கனவே 100 போலீசார், 50 அதிரடிப்படையினர், நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினர்மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்திற்கான காரணத்தையும் வெடிகுண்டு நிபுணர்கள்ஆராய்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், வெடிவிபத்திற்கான உண்மையான காரணத்தை அறிய, நாக்பூர் வெடிமருந்து உற்பத்தி கட்டுப்பாட்டுநிறுவனத்தைச் சேர்ந்த ஒரு வெடிகுண்டு நிபுணர்இன்று காலை இங்கு வந்தார்.

வந்தவுடன் தன்னுடைய விசாரணையையும் ஆரம்பித்து விட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வெடிகுண்டுநிபுணர்களும் இவருக்கு உதவி வருகின்றனர். இவருடைய விசாரணையின் முடிவில், வெடிவிபத்திற்கானஉண்மையான காரணம் தெரிய வரும்.

29 பேரைப் பலிவாங்கிய இந்த வெடிவிபத்திற்கு மனிதத் தவறுகளே காரணம் என்று கூறப்படுகிறது. கையிலேஎடுத்துச் செல்லப்படும்போது, தவறி விழுந்தபோதுதான், இந்த வெடிகுண்டுகள் வெடித்து, இந்தப் பயங்கர விபத்துஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஏனென்றால், சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஐ.எஸ்.ஓ. 9002 சான்றிதழை இந்தத் தொழிற்சாலைபெற்றுள்ளது. மேலும், சிறந்த பாதுகாப்புக்கான பரிசையும் இத்தொழிற்சாலை பெற்றுள்ளது.

இந்நிலையில், தொழிற்சாலையின் இடிபாடுகளுக்கிடையில் மீட்கப்பட்ட உடல்கள், ஒவ்வொன்றாக போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு, உயிருக்குப்போராடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X