For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 ஐபிஎஸ் அதிகாரிகளை அனுப்ப முடியாது... ஜெ. உறுதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் மற்றும் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்குஅனுப்ப முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

போலீஸ் பயிற்சிப் பிரிவு டிஜிபி ராஜகோபாலன் மற்றும் 3 போலீஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்புமாறுமத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் ராஜகோபாலனை மட்டும் மத்திய பணிக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மற்ற அதிகாரிகள்குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,

முத்துக்கருப்பன், ஜார்ஜ், கிறிஸ்டோபர் நெல்சன் ஆகிய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் மத்திய பணிக்கு அனுப்பமுடியாது. அவர்களது பணி தமிழகத்தில் தேவைப்படுகிறது. இதுகுறித்து, மத்திய அரசுக்கு விரிவான பதிலைஅனுப்புவோம்.

பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதற்கு தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்.

காட்பாடி விபத்து குறித்து பேரதிர்ச்சி அடைந்தேன். இதுபோன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல்இருக்க போதுமான கவனம் செலுத்தப்படும்.

தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X