புழுத்துப் போன அரிசி இல்லை... அதிகாரிகள் சான்று
சென்னை:
தமிழக சிவில் சப்ளை கார்ப்பரேஷன் கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி புழுத்துப் போன அரிசிஇல்லை என சென்னை கிண்டி ஆய்வுக் கூடத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள அரிசி புழுத்துப் போன அரிசி இல்லைஎன முன்னாள் அமைச்சர் பொன்முடி நிரூபித்தார்.
இதைத் தொடர்ந்து பொன்முடி, அந்த நிகழ்ச்சியைப் படம் பிடித்த சன் டிவி நிருபர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கைதுகள் சூடுபிடிக்கத் தொடங்கின.
இந்நிலையில், அரசு கிட்டங்கிகளில் உள்ள ரேஷன் அரிசிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவற்றில்சிலவற்றை கிண்டியில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி புழுத்துப் போன அரிசி இல்லை என்றும், அவைபயன்படுத்துவதற்குத் தகுதியானவையே என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக சான்றிதழையும் அவர்கள் அளித்துள்ளனர்.