காஷ்மீர் கண்ணிவெடியில் பலியான தமிழக ராணுவ வீரர் உடல் தகனம்
சேலம்:
காஷ்மீர் குண்டுவெடிப்பில் பலியான சேலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் நடராஜனின் உடல் அவரது சொந்த ஊரில்தகனம் செய்யப்பட்டது.
கடந்த 12ந் தேதி நள்ளிரவு காஷ்மீர் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி பலியானார்.
இதையடுத்து இவரது உடல் காஷ்மீரிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. பிறகு அங்கிருந்துராணுவ லாரி மூலம் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவரது உடலை 5 ராணுவவீரர்கள் எடுத்துச் சென்று அவரது வீட்டில் இறக்கிவைத்தார்கள். அப்போது நடராஜனின்தாய் செல்வி, தந்தை சண்முகம் மற்றும் சகோதர சகோதரிகள் கதறி அழுதார்கள்.
தகவல் அறிந்ததும் சேலம் மாவட்டக் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வீரர் நடராஜன் வீட்டுக்கு வந்து அவரதுஉடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
பிறகு அவரது உடல் அதே ராணுவ லாரி மூலம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.சிதைக்கு நடராஜனின் தந்தை சண்முகம் தீமூட்டினார்.
இறப்பதற்கு முந்திய நாள்தான் நடராஜன் தனக்கு பெண் பார்க்கச் சொல்லி இருக்கிறார். அடுத்த மாதம் வந்துதிருமணம் செய்துகொள்வதாகவும் சொல்லி இருக்கிறார்.
ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு இறந்த வீரர் நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.