பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை: விரைவில் புதிய சட்டம்
சென்னை:
பொது இடங்களில் சிகரெட் குடிக்கவும், குட்கா போன்ற உயிரைக் கெடுக்கும் பொருட்களுக்குத் தடை விதிக்கவும் புதிய சட்டமசோதா கொண்டு வரப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரை விவரம்:
சென்னை குடிநீர்ப் பிரச்சினையை சமாளிக்க ரயில்கள், லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கு ரூ. 75 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. சென்னைக்குக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் பெய்த மழை நீர் வீணாக கடலுக்குச் சென்று சேருவதைத் தடுக்க குரட்டலையாறு, அடையாறு, கூவம், பாலாறுஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டி மழை நீரைச் சேர்த்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம், மேட்டூரிலிருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம்ஆகியவற்றைத் தீவிரமாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications