திமுக ஆட்சியில் படு மோசமானது தமிழக நிதி நிலை- அதிமுக குற்றச்சாட்டு
சென்னை:
தமிழக சட்டசபையில் 2001-2002ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தமிழக நிதிஅமைச்சர் பொன்னையானால் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கடந்த 5 ஆண்டு காலததில் (திமுக ஆட்சியில்) தமிழகத்தின் நிதி நிலை கவலைஅளிக்கத்தக்க அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது என்று தமிழக நிதி அமைச்சர்பொன்னையன் கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட்டுடன் வெள்ளை அறிக்கை ஒன்றையும் பொன்னையன் சட்டசபையில்சமர்ப்பித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் (1996-2001) தமிழகத்தின் நிதிநிலை மிகவும்மோசமடைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது 1996-2001 ஆண்டு காலகட்டத்தில்தான் தமிழக அரசின் வருவாய் மிகவும் குறைந்துள்ளது. அரசின் வரி இல்லாவருவாய் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. அதில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை.
சம்பள உயர்வு, ஓய்வூதிய உயர்வு போன்றவற்றால் அரசுக்கு அதிக செலவுஏற்பட்டுள்ளது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
2000-2001ம் ஆண்டு பட்ஜெட்டில்தான் மிக அதிகமான அளவு துண்டு விழுந்துள்ளது.
1990-1991ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ 1,126 கோடிதான் பற்றாக்குறை விழுந்தது.1995-1996ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ 1,225 கோடிதான் பற்றாக்குறை இருந்தது.
ஆனால் 2000-2001ம் ஆண்டு பட்ஜெட்டில் (அதாவது, தி.மு.க. ஆட்சியின் கடைசிபட்ஜெட்டில்) மிக அதிக அளவாக ரூ 5,781 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது.
இது கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தின் நிதி நிலை எவ்வளவு வீழ்ச்சிஅடைந்துள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
தமிழக அரசின் நிதிநிலையை மேம்படுத்தி மீண்டும் நிதிநிலையை சீர்படுத்த பல நீண்டகால திட்டங்கள் தேவைப்படுகின்றன. அந்தத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்றார்பொன்னையன்.












Click it and Unblock the Notifications