பற்றாக்குறையை குறைப்பதே பட்ஜெட்டின் நோக்கம் - தமிழக அரசு
சென்னை:
தமிழக அரசின் நிதி நிலைமை பற்றாக்குறையை வெகுவாகக் குறைக்கும் நோக்கத்தில் பட்ஜெட் போடப்பட்டுள்ளதுஎன்று தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் சந்தானம் கூறினார்.
தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், தமிழகத்தின் நிதி நிலை இருப்பு, இந்த ஆண்டின் மொத்தவருவாய் மற்றும் செலவுகள் குறித்து தமிழக அரசின் நிதித்துறைச் செலாளர் அறிவித்தார். பட்ஜெட் குறித்துநிருபர்களிடம் மேலும் அவர் கூறியதாவது,
தமிழகத்தின் மொத்த நிதிப்பற்றாக்குறை ரூ.827 கோடியாக இருக்கிறது.
ஆனால் இந்த பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரி அதிகரிப்பின் மூலம் அரசுக்கு ரூ.135.38 கோடி வருவாய்கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
எனவே பற்றாக்குறை அளவு ரூ.692 கோடியாகக் குறையும். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதியவிதிமுறைகள் (வரிவிதிப்புகள்) சனிக்கி
ழமை (இன்று) முதல் அமலுக்கு வரும் என்றார்.
மேலும் நிலக்கரி உரிமத்திற்காக மத்திய அரசு தமிழகத்துக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.590 கோடி. இதுவிரைவில் வந்து சேரும்.
தமிழகம் இப்போது கடனில் இருக்கிறதா என்ற கேட்டதற்கு, இப்போது அந்த நிலைமையில் தமிழகம் இல்லை.அந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டு விடக்கூடாது என்றுதான் நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
மேலும் பணியாளர்கள் ஓய்வுபெரும் வயதைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.