திமுகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை.. ஜெ. சாடல்
சென்னை:
சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின்போது அதில் கலந்து கொள்ளாமல் திமுக புறக்கணித்தது ஜனநாயகத்தை அவர்கள்மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் சனிக்கிழமை காலை 2001-2002ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர்பொன்னையன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய எழுந்தபோது திமுக எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் எழுந்து, அரசுக்கு எதிராகசில கருத்துக்களைக் கூறி விட்டு தனது உறுப்பினர்களுடன் வெளிநடப்புச் செய்தார். பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் குறித்தும் திமுக வெளிநடப்பு குறித்தும் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், பல்வேறுதரப்பினருக்கும் பலன் அளிக்கும் விதத்திலான பட்ஜெட் இது. நீண்டகால கண்ணோட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மிகச் சிறப்பான பட்ஜெட் இது.
பட்ஜெட் தாக்கலை திமுகவினர் புறக்கணித்தது, ஜனநாயக நெறிமுறைகளில் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதையேகாட்டுகிறது. சட்டசபையில் ஜனநாயக நெறிமுறைகளை மதித்து நடப்போம் என்று அக்கட்சி தலைவர் கூறியதற்கும், அவர்கள்நடந்து கொண்ட விதத்திற்கும் சம்பந்தமே இல்லை. எல்லாம் முரண்பாடாகவே உள்ளது என்றார் ஜெயலலிதா












Click it and Unblock the Notifications