தர்மபுரி மாவட்டம் 2 ஆக பிரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தர்மபுரி மாவட்டத்தைப் பிரித்து கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்றுதமிழக சட்டசபையில் சனிக்கிழமை மாநில நிதியமைச்சர் சி.பொன்னையன் அறிவித்தார்.
2001-2002ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் அறிக்கையை நிதியமச்ைசர் பொன்னையன் சனிக்கிழமை காலை 10.30மணியளவில் அவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அமைச்சர் பேசியதாவது:
- தோட்டக்கலை மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்த புதிதாக வேளாண் வணிகத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்படும்.
- 20 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை மேம்படுத்த புதிய திட்டம் கொண்டு வரப்படும். இத் திட்டத்தின்படி தரிசு நிலங்களில் எண்ணெய் வித்துக்கள் நடுவது, மரங்கள் நடுவது, நறுமணச் செடிகளைப் பயிரிடுவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
- நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவியுடன் புதிய திட்டம்.
- கால்நடைகளுக்கு உயிர் நாடியான மேய்ச்சல் நிலங்களில் கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்படும். அவசியம் ஏற்பட்டால் அரசு உத்தரவைப் பெற்றே மேய்ச்சல் நிலங்கள் மாற்றப்பட வேண்டும்.
- கால்நடைப் பராமரிப்பு தொடர்பாக விவசாயிகளுக்கு ரூ. 3.36 கோடி செலவில் பயிற்சி அளிக்கப்படும். தமிழகம் முழுவதிலும் 336 ஊராட்சிகளில் இது அமல்படுத்தப்படும்.
- கால்நடைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்காக ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கிராமப்புறங்களில் இளைஞர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து, இளைஞர்களிடையே சுய தொழில் மற்றும்
- தன்னம்பிக்கையை வளர்க்க உதவி செய்யப்படும்.
- மகளிர் சிறு கடன் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
- கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊராட்சி அலுவலகங்கள் அருகே ரூ. 60,000 மதிப்பில் அலுவலகங்கள் கட்டித்தரப்படும். அதன்படி ஆண்டுக்கு 4000 அலுவலகங்கள் கட்டப்படும்.
- சட்டசபை உறுப்பினர் நிதியாக தற்போது ரூ. 77 லட்சம் வழங்கப்படுகிறது. இதை ரூ. 82 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 192.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் காடு வளர்ப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அமல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 75,250 ஹெக்டேர் நிலப்பரப்பில் வனத் தோட்டங்கள் அமைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications