ராமேஸ்வரத்தில் 2வது மீன்பிடி துறைமுகம் அமைக்கத் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராமேஸ்வரத்தில் மேலும் ஒரு மீன் பிடி துறைமுகம் அமைக்கப்படவுள்ளது.

தமிழக பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் பொன்னையன் வெளியிட்டார்.

பட்ஜெட் உரையில் அவர் கூறுகையில்,

மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ. 53 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ராமேஸ்வரத்தில் புதிதாக மீன்பிடி துறைமுகம்ஏற்படுத்தப்படும். பழையாறு பகுதியில் இந்த இரண்டாவது மீன் பிடி துறைமுகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு மட்டும் தற்போது வீடுகள் கட்டித் தரப்படுகிறது. இதை உள் நாட்டில் ஏரிகள்,கண்மாய்களில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்டுக்கு 4000 வீடுகள் என்ற அளவில் தலா ரூ. 37,000 மதிப்பில் மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்.

மீன் வளம் இல்லாத காலத்தில் மீன்வர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ. 1,080லிருந்து உயர்த்தி ரூ. 1,200 ஆகவழங்கப்படும்.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் தமிழக மீன்வர்கள் இலங்கைக் கடற்பகுதிக்குள் தவறுதலாக சென்று மீன்பிடித்து இலங்கைக்கடற்படையினரால் சுடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்க மண்டபம் பகுதியில் இந்திய கடல் எல்லையில் நான்கு இடங்களில் ஒளிரும் வழிகாட்டி மிதவைகள் போடப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+