என்.ஆர்.ஐ. தமிழர்களைக் கொண்ட தொழில் கூட்டமைப்பு அமைக்கப்படும்
சென்னை:
வெளிநாடு வாழ் இந்தியத் தமிழர்களைக் கொண்ட தொழில் கூட்டமைப்பு உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2001-2002ம் ஆண்டுக்கான பட்ஜெட் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில்கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை தரமணியிலுள்ள டைடல் பூங்காவிற்கு அருகில் அதி நவீன வசதிகள் கொண்ட இரண்டாவது டைடல் பூங்காகட்டப்படும்.
மினி டைடல் பூங்காக்கள்:
மென்பொருள் (சாப்ட்வேர்) வளர்ச்சிக்காக சென்னையிலுள்ள டைடல் பூங்காக்கள் போல தமிழகத்தின் மற்ற மாநகரங்களிலும்மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.
சென்னை மற்றும் பிற நகரங்களில் தனியார் உதவியுடன் மென்பொருள் தயாரிப்பு பூங்காக்கள் துவங்கப்படும்.
சென்னையில், ரூ. 65 கோடி செலவில் பயோ டெக்னாலஜி பூங்கா அமைக்கப்படும். இதற்காக அமெரிக்காவின் கார்னர்பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மரபணு ஆய்வு மையம் என்று பெயரிடப்படும்.
சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு ரூ. 17.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புனிதத் தலங்கள், சுற்றுலாத் தலங்களில் நட்சத்திரஹோட்டல்கள் தனியார் உதவியுடன் கட்டப்படும்.
சுற்றுலாத் தலங்களின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளை கவரும் திட்டங்களுக்காக ரூ. 5.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications