பெரும் மோதல் தவிர்ப்பு
சென்னை:
சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று அவையை திமுக புறக்கணித்து வெளிநடப்பு செய்ததன் மூலம்பெரிய மோதல் தவிர்க்கப்பட்டுவிட்டது.
அவையில் என்னைப் பற்றி அவதூறாகப் பேசி அதிமுக எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டு அமளியைக் கிளப்பவும், சட்டசபையில்ரணகளத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கலைக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது என முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே திமுக மீது குற்றம்சாட்டியிருந்தார்.
திமுக தரப்பிலும் கூட, என்னைக் கைது செய்தது குறித்து சட்டசபையில் கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா என்று கருணாநிதி கூறிவைக்க சட்டசபையில் அடிதடி உறுதி என்று கருதப்பட்டது.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் என்ன பேசினாலும் நீங்கள் யாரும் எந்த உணர்ச்சியும் காட்டக் கூடாது, வாயே திறக்கக் கூடாதுஎன அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஜெயலலிதா நேற்றே உத்தரவிட்டிருந்தார்.
அதே போல திமுக உறுப்பினர்கள் ஏதேதோ பேசியபோதும் கூட அதிமுக எம்.எல்.ஏக்கள் கணத்த அமைதி காத்தனர். முகத்தில் எந்தரீயாக்ஷனும் காட்டாமல் உட்கார்ந்து இருந்தனர்.
கொஞ்ச நேரம் சத்தம்போட்ட திமுக உறுப்பினர்கள், ஆளும்கட்சித் தரப்பிலிருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லாததால் வெறுத்துப்போய் வெளிநடப்பு செய்வதாக அறிவித்துவிட்டு அமைதியாக வெளியேறினர்.
முன்னெச்சரிக்கையாக சபையில் அதிக அளவிலான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். மிக பலத்த பாதுகாப்புக்கு இடையேசபைக் கூட்டம் தொடங்கியது. பொன்னையன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications