பேரணிக்கு வந்த 2 தி.மு.க. தொண்டர்கள் எரித்துக் கொலை?
சென்னை:
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திமுக பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் தனது கட்சியைச் சேர்ந்த 2 தொண்டர்கள் எரித்துக் கொல்லப்பட்டதாக திமுகதலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த ஒரு தொண்டர் மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த சேகர் என்ற உதயசூரியன் ஆகிய தொண்டர்களைக் காணவில்லை என்று தி.மு.க.தலைமையகத்துக்கு தகவல் வந்துள்ளது.
ஒருவேளை பத்திரிக்கையாளர்கள் சொல்வது போல 2 பேரும் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம். இதுகுறித்து உறுதியான தகவல் தெரிந்தால் தி.மு.கதலைமையகத்தில் செய்தியாளர்கள் தெரிவிக்க வேண்டும்.
இது தொடர்பாக போலீஸாரை நம்புவதற்கில்லை என்றார் கருணாநிதி.
அ.தி.மு.க சிறுபான்மையினருக்கு கேள்வி:
என்னை ஏசு கிறிஸ்து போல் சித்தரித்து கட்-அவுட் வைக்கப்பட்டதாகக் கூறி அதைக் கண்டித்து, மாவட்டம்தோறும் பொதுக்கூட்டம்நடத்தப்போவதாக அ.தி.மு.க. சிறுபான்மை அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கிருஷ்ணய்யர் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு ஆர்வம் மிகுந்த தோழர் ஒருவர் அந்த கட்-அவுட்டை வைத்துள்ளார். அது. தி.மு.க.சார்பில்வைக்கப்பட்டதல்ல.
786 என்ன அல்வாவின் ஃபோன் நம்பரா? பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா? என்றெல்லாம் அ.தி.மு.கவினர் சேலம் முழுவதும் போஸ்டர்ஒட்டியபோது கண்டு கொள்ளாத முஸ்லிம், கிறிஸ்துவ நண்பர்கள் எங்கே போயிருந்தனர் என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார்.