For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேரணிக்கு வந்த 2 தி.மு.க. தொண்டர்கள் எரித்துக் கொலை?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திமுக பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் தனது கட்சியைச் சேர்ந்த 2 தொண்டர்கள் எரித்துக் கொல்லப்பட்டதாக திமுகதலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையில், பேரணியில் அதிமுகவைச் சேர்ந்த வன்முறைக் கும்பல் கார்கள், வேன்களை எரித்துக் கொண்டிருந்தது. அப்போது 2 திமுகதொண்டர்களை எரிந்து கொண்டிருந்த வேன்களுக்குள் அவர்கள் போட்டதை சில செய்தியாளர்கள் பார்த்துள்ளனர்.

ஈரோட்டைச் சேர்ந்த ஒரு தொண்டர் மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த சேகர் என்ற உதயசூரியன் ஆகிய தொண்டர்களைக் காணவில்லை என்று தி.மு.க.தலைமையகத்துக்கு தகவல் வந்துள்ளது.

ஒருவேளை பத்திரிக்கையாளர்கள் சொல்வது போல 2 பேரும் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம். இதுகுறித்து உறுதியான தகவல் தெரிந்தால் தி.மு.கதலைமையகத்தில் செய்தியாளர்கள் தெரிவிக்க வேண்டும்.

இது தொடர்பாக போலீஸாரை நம்புவதற்கில்லை என்றார் கருணாநிதி.

அ.தி.மு.க சிறுபான்மையினருக்கு கேள்வி:

என்னை ஏசு கிறிஸ்து போல் சித்தரித்து கட்-அவுட் வைக்கப்பட்டதாகக் கூறி அதைக் கண்டித்து, மாவட்டம்தோறும் பொதுக்கூட்டம்நடத்தப்போவதாக அ.தி.மு.க. சிறுபான்மை அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கிருஷ்ணய்யர் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு ஆர்வம் மிகுந்த தோழர் ஒருவர் அந்த கட்-அவுட்டை வைத்துள்ளார். அது. தி.மு.க.சார்பில்வைக்கப்பட்டதல்ல.

786 என்ன அல்வாவின் ஃபோன் நம்பரா? பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா? என்றெல்லாம் அ.தி.மு.கவினர் சேலம் முழுவதும் போஸ்டர்ஒட்டியபோது கண்டு கொள்ளாத முஸ்லிம், கிறிஸ்துவ நண்பர்கள் எங்கே போயிருந்தனர் என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X