Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிலிப்பைன்ஸ் ஓட்டலில் பயங்கர தீ: 75 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மணிலா:

பிலிப்பைன்ஸ், மணிலாவுக்கு அருகே உள்ள கியோசோன் நகரில் உள்ள ஓட்டல்ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கிருஸ்துவ மத கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த 75 பேர்உயிரிழந்தனர்.

இது குறித்து மணிலாவில் உள்ள சமூகப் பாதுகாப்புத்துறை இயக்குனர் ஜோனி யோசெய்தியாளர்களிடம் கூறுகையில்,

மணிலாவின் பல கிராமப் புறங்களிலிருந்தும் கிறிஸ்தவ மத கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக கியோசோன் நகரில் உள்ள 6 மாடி ஓட்டல் ஒன்றில் கூடியிருந்தனர்.

அதிகாலை 4.30 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை 2.00 மணி) மின்சாரகோளாறு காரணமாக ஓட்டலின் 3வது மாடியில் தீ பிடித்தது. அந்த தீ மிக வேகமாகஓட்டலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

விபத்தில் 75 பேர் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இவர்களில் பலரும் 30வயது முதல் 40 வயது மதிக்கத்தவர்கள். பல குழந்தைகளும் இறந்து போனார்கள்.

தீ கொழுந்து விட்டு எரிந்த காரணத்தால் பெரும் புகை மூட்டம் கிளம்பியது. இந்த புகைமூட்டம் மத கூட்டம் நடந்த அறைக்குள்ளும் பரவியது. இதனால் ஏற்பட்ட மூச்சுதிணறலாலும், தீயிலிருந்து தப்பிக்க வழி ஏதும் இல்லாததாலும் அவர்கள் இறந்தனர்.

முன்னதாக மாடியில் தீயில் சிக்கியவர்கள் கீழே வர இயலாமல் பெரும் மரண ஓலத்தைஎழுப்பியவண்ணம் இருந்தனர். இந்த அழுகுரல்கள் இதயத்தை கனக்கச்செய்துவிட்டன. ஆனால், தீ பயங்கரமாக எரிந்ததால், அவர்களை காப்பாற்றதீயணைப்புப் படையினர் கூட செல்ல முடியவில்லை.

தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடித்தான் தீயை அணைத்தனர் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+