சட்டசபையில் திமுகவுக்கு பா.ம.க. நோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் பாட்டாளி மக்கள் கட்சி சேரவில்லை என்று அக்கட்சித் தலைவர்ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்ணியில் சேர்ந்த பிறகு அந்தக் கூட்டணியின் தமிழகத் தலைவர் கருணாநிதியை,பா.ம.க. தலைவர் ராமதாஸ் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை ராமதாஸ் கருணாநிதியைச் சந்தித்து பேசுவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதற்கிடையில்ராமதாஸ் வந்து என்னைச் சந்தித்தால் தான் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்று கருணாநிதி அடிக்கடி கூறி வருகிறார்.

அதை ராமதாஸ் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மத்தியில் பா.ஜ.க. உடன் மட்டுமே கூட்டணி. தமிழகத்தில் திமுகவுடன்கூட்டணி இல்லை எனற நிலையில் தான் ராமதாஸ் இப்போது இருக்கிறார்.

இந் நிலையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவிலான தேசிய ஜனநாயக்கூட்டணியில்தான் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்துள்ளது. தமிழக அளவில் திமுக தலைமையிலான கூட்டணியில் இன்னும்நாங்கள் சேரவில்லை. தேவைப்படும்போது நாங்கள் கூட்டணியில் சேருவோம்.

மேலும், சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் நாங்கள் எந்தக் கட்சியுடனும் சேர்ந்து செயல்பட மாட்டோம். தனித்தேசெயல்படுவோம் என்று அறிவித்துள்ளார் மணி.

ஏற்கனவே திமுக வுடன் ஏற்பட்ட தொகுதி உடன்பாடு பிரச்சனையில் வைகோ தலைமையிலான மதிமுக திமுகவுடன் கூட்டணிஇல்லை என்று அறிவித்தது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக இடம்பெறும். வாஜ்பாய் தான் எங்களுக்குகூட்டணித் தலைவர் என்று அறிவித்தது.

இதே நிலையைத்தான் இப்போது பா.ம.க கடைபிடிக்கப் போவதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+