பா.ஜ.க. மகளிர் அணி பதவியைத் துறந்தார் நடிகை விஜயசாந்தி
சென்னை:
பாரதீய ஜனதா கட்சி மகளிர் அணித் துணைத் தலைவி பதவியை நடிகை விஜயசாந்தி ராஜினாமா செய்தார்.
இவர் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சென்னையில் திமுகவின்ர் நடத்தியபேரணியில் திமுகவினர் மீது போலீசார் எடுத்த நடவடிக்கைகள் ஆகிய விவகாரங்களில் அதிமுகவுக்கு ஆதராவாககுரல்கொடுத்து வந்தார்.
இதையடுத்து இவரது வீடு திமுகவினரால் தாக்கப்பட்டது. திடீரென ஒருநாள் ஜெயலலிதாவையும் போய் சந்தித்துபா.ஜ.க.-திமுக தலைவர்களுக்கு எரிச்சலூட்டினார். கொஞ்ச காலமாகவே பா.ஜ.கவில் அதிருப்தியுடன் இருந்துவரும் விஜயசாந்தி, இப்போது மகளிர் அணித் துணைத் தலைவி பதவியையும் ராஜினாமா செய்வதாகஅறிவித்துள்ளார்.
இவர் தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிரப்பதாவது,
கடந்த 12ம தேதி திமுகவினர் நடத்திய கண்டனப் பேரணியில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக முன்னாள்கவர்னர் பாத்திமா பீவி ஆகியோருக்கு எதிராக திமுகவினர் எழுப்பிய ஆபாச கோஷங்கள் என் மனதைபுண்படுத்திவிட்டன.
நான் அரசியலைவிட, பதவியைவிட, பெண்களின் மானம் மரியாதைதான் முக்கியம் என்று நினைப்பவள்.
ஒரு பெண்ணாக இருந்து கொண்டு பெண்களுக்கு எதிரான செயல்களை தட்டிக் கேட்காமல் இருக்க முடியாது.அதனால் நான் வகித்து வரும் பா.ஜ.க. மகளிர் அணித் துணைத் தலைவி பதவியை ராஜினாமா செய்கிறேன்.இவ்வாறு அந்த ராஜினாமா கடிதத்தில் நடிகை விஜயசாந்தி குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் சேருவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, நான் பா.ஜ.கவில் உறுப்பினராக நீடிப்பேன் என்றுகூறினார்.












Click it and Unblock the Notifications