சவுதியில் இந்தியக் கொலையாளியின் தலை துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
ரியாத்:
இந்தியக் கொலையாளி ஒருவரின் தலையைத் துண்டித்து, சவுதி அரேபிய அரசு தண்டனையை நிறைவேற்றிஉள்ளது.
மரண தண்டனை என்றால், தூக்கில் தொங்கவிடுவது அல்ல. சிரச்சேதம்தான். அதாவது, தலையைத் தனியே வெட்டிஎடுத்துவிடுவார்கள்.
அந்த வகையில், ஹசான் பின் மேஷால் என்ற அரேபியரைப் பாறையால் தாக்கிக் கொன்ற காரணத்திற்காக, தயால்என்ற இந்தியருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
தயாலின் தலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வாளால் துண்டிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இத்துடன், இந்த ஆண்டு மட்டும் 70 பேர் தலையை அரேபிய அரசு துண்டித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் 113பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று சவுதி அரேபிய உள்துறைஅமைச்சகம் கூறியது.












Click it and Unblock the Notifications