இலங்கை: மிக்-27 விமானம் நொறுங்கி பைலட் பலி
கொழும்பு:
இலங்கை போர் விமானம் ஒன்று பயிற்சியின் போது ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியதில், அதன் பைலட்அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பொதுமக்கள் 7 பேரும் படுகாயமடைந்தனர்.
இது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட "மிக்-27" தக விமானம் ஆகும். இந்த விமானத்தை வலாரி என்ற பைலட்ஓட்டினார். இவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்.
இந்த விமானம் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் சீதுவா என்ற குடியிருப்புப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. விமானத்தின்எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வலாரி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சீதுவா பகுதியைச் சேர்ந்த 7 பேர்படுகாயமடைமந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து பற்றித் தகவல் அறிந்ததும் அதிகாரிகளும் பொதுமக்களும் அந்த இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில்ஈடுபட்டனர்.
இந்த விமானம் சில நாட்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் கடுநாயகே விமான தளத்தின் மீது நடத்தியதாக்குதலில் லேசாக பழுதடைந்திருந்ததது. சரிசெய்யப்பட்ட இந்த விமானம், நேற்று தான் முதலில் பயிற்சிக்குஎடுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.