கள்ளச் சாராயக் கும்பல் தாக்குதல்: 4 போலீசார் காயம்
Subscribe to Oneindia Tamil
மேலூர்:
மேலூர் அருகே கள்ளச் சாராயக் கும்பல் அரிவாளால் வெட்டியதில், 4 போலீசார் பலத்த காயமடைந்தனர்.
ஆனால், போலீசார் வருவதைப் பற்றி, அந்தக் கள்ளச் சாராயக் கும்பல் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.மாறாக, அவர்கள் அரிவாள்களைக் கையில் எடுத்துக்கொண்டுதான் போலீசாரை வரவேற்றனர்.
தேடி வந்த போலீசார்களை, கள்ளச் சாராயக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அரிவாளால் வெட்டிச் சாய்த்தனர்.
இந்தத் தாக்குதலில், சக்திவேல் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய போலீஸ் இன்ஸ்பெக்டர்களும், வேறு 2 ஏட்டுகளும்பலத்த காயமடைந்தனர்.
கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்காகச் சென்ற இந்த 4 போலீசாரும், தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications