For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ளச் சாராயக் கும்பல் தாக்குதல்: 4 போலீசார் காயம்

By Staff
Google Oneindia Tamil News

மேலூர்:

மேலூர் அருகே கள்ளச் சாராயக் கும்பல் அரிவாளால் வெட்டியதில், 4 போலீசார் பலத்த காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, அவ்விடத்துக்குப் போலீசார் விரைந்து சென்றனர்.

ஆனால், போலீசார் வருவதைப் பற்றி, அந்தக் கள்ளச் சாராயக் கும்பல் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.மாறாக, அவர்கள் அரிவாள்களைக் கையில் எடுத்துக்கொண்டுதான் போலீசாரை வரவேற்றனர்.

தேடி வந்த போலீசார்களை, கள்ளச் சாராயக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அரிவாளால் வெட்டிச் சாய்த்தனர்.

இந்தத் தாக்குதலில், சக்திவேல் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய போலீஸ் இன்ஸ்பெக்டர்களும், வேறு 2 ஏட்டுகளும்பலத்த காயமடைந்தனர்.

கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்காகச் சென்ற இந்த 4 போலீசாரும், தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X