விஷம் கலந்த மிட்டாய் சாப்பிட்ட 3 சிறுமிகள் சாவு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் விஷம் கலந்த மிட்டாய் சாப்பிட்ட 3 சிறுமிகள் இறந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகில் உள்ளது சுப்பிரமணியபுரம். இந்தப் பகுதியைச் சேர்ந்த சாரதா என்ற சிறுமி தனதுவீட்டிற்கு வெளியே கிடந்த மிட்டாய்கள் அடங்கிய பாக்கெட்டை எடுத்துள்ளார்.

அதில் மிட்டாய்கள் இருக்கவே தான் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு தனது சகோதரிகளான விஜயலட்சுமி மற்றும் மகாலெட்சுமிஆகியோருக்கும் கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்திலேயே 3 சிறுமிகளும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்களை அவர்களது பெற்றோர் நாகர்கோவில்மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியிலேயே 3 சிறுமிகளும் பரிதாபமாக இறந்தனர்.

நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் விஷம் கலந்த மிட்டாயை சாப்பிட்டதால்தான் 3பேரும் இறந்ததாக தெரிவித்தனர்.

விஷம் கலந்த மிட்டாயை யார் இப்படி குழந்தைகள் கண்ணில் படும்படி போட்டுவிட்டச் சென்றது என்று தெரியவில்லை.

இதுகுறித்து இரணியல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+