For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெற்ற தந்தையைக் கொன்ற மகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற மகள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.

செய்துங்கநல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்டது கருங்குளம். இப்பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் தேவர்.இவர் சமீபத்தில் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக, அங்கப்பன் மற்றும் முத்தையா ஆகிய இருவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில்,வெங்கடாச்சலத்தின் மகள் சீதாலட்சுமி மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்படவே அவரைக் கைது செய்தனர்.விசாரணையில் தான்தான் தனது தந்தையை வெட்டிக் கொன்றதாக சீதாலட்சுமி ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்துக் கூறப்படுவதாவது:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மதியரசு தேவர் என்பவரின் மகன் முருகனுக்கும், சீதாலட்சுமிக்கும் இடையேகாதல் மலர்ந்தது. காதலர்கள் எல்லை மீறவே சீதாலட்சுமி கர்ப்பமடைந்தார். இதையடுத்து அவரை முருகனுடன்பெரியவர்கள் சேர்த்து வைத்தனர். ஆனால், சில நாட்களிலேயே சீதாலட்சுமியை விட்டுப் பிரிந்து விட்டார்முருகன்.

இதனால் அவமானமடைந்த சீதாலட்சுமியின் சதோகரர் செல்லத்துரை தற்கொலை செய்து கொண்டார். இன்னொருசகோதரர் சுடலை முத்து வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்குச் சென்று விட்டார்.

இதனால் வெங்கடாச்சலம் அதிர்ச்சியடைந்தார். தனது 2 மகன்களும் தன்னை விட்டுப் பிரிந்ததற்கு சீதாலட்சுமிதான்காரணம் என்று ஆத்திரமடைந்தார்.

இதனால் சீதாலட்சுமியை எப்போதும் திட்டிக் கொண்டிருந்தார். இதனால் சீதாலட்சுமி ஆத்திரமடைந்தார். தானேகாதலுடன் வாழ முடியாமல் தவித்துக் கொண்டுள்ளபோது, தந்தை வேறு சுடுசொற்களால் திட்டிக் கொண்டிருப்பதைஅவரால் தாங்க முடியவில்லை. இதையடுத்து அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

தனது தாய் மலையம்மாள் வழக்கமாக அதிகாலை மாடு மேய்க்க ஆற்றங்கரை சென்று விடுவதால் காலை 11மணியளவில் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கும் நேரமாகப் பார்த்துக் கொலை செய்ய முடிவுசெய்தார். அதன்படி வெள்ளிக்கிழமை காலை வெங்காடசலத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.

பின்னர் தனது தாயிடம் சென்று, முத்தையாவும் அங்கப்பனும் சேர்ந்து தந்தையைக் கொன்று விட்டார்கள் என்றுகூறினார். அவர் உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் சீதாலட்சுமி மீது சந்தேகம்அடைந்து அவரை விசாரிக்கையில் உண்மை தெரிய வந்தது.

ஒரு வயது ஆண் குழந்தையுடன், திருச்சி சிறையில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டார் சீதாலட்சுமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X