ஜெ.யைப் பின்பற்றியே நானும்.... கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அவர் எத்தனை முறை சட்டசபைக்கு வந்தார்? அதையேதான்நானும் பின்பற்றுகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சனிக்கிழமை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது தி.மு.கவும், அதன் கூட்டணி கட்சிகளும் வெளிநடப்புசெய்தன.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறுகையில், "தி.மு.கவினர் தங்கள் ஜனநாயக கடமையை செய்யதவறிவிட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி சட்டசபைக்கே வருவதில்லை" என்றார்.

இந்நிலையில் தி.மு.க.தலைமையகத்தில் கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் சட்டசபைக்கு வராமல் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

இவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது எத்தனை முறை சட்டசபைக்கு வந்தார்? எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சிதலைவராக இருந்த போது எத்தனை முறை சட்டசபைக்கு வந்தார்? அவர்களைத்தான் நானும் பின்பற்றுகிறேன்.

கடந்த ஆட்சியில் மானியங்கள் அதிகம் வழங்கியதால் தான் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று நிதியமைச்சர்பொன்னையன் தெரிவித்துள்ளார்.

மானியங்கள் வழங்குவது சகஜமானதுதான். மானியங்கள் வழங்குவதால் நிதிநிலைமை மோசமடையும் என்றுபொன்னையன் அட்வைஸ்தான் செய்துள்ளார்.

இது எந்த ஆட்சியில் நடந்தது என்று பொன்னையன் கூறவில்லை. இப்போதைய நிதித் துறை செயலாளர்தான்அப்போதும் நிதித்துறை செயலாளராக இருந்தார். இது தவறு என்றால், தவறுக்கு அவரும் காரணமாவார் என்றுகருணாநிதி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+