ராஜீவ் பிறந்த நாள்: தலைவர்கள் அஞ்சலி
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 57வது பிறந்த நாளையொட்டி, தமிழகத்தில் திங்கள்கிழமை தலைவர்கள்அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள் பீட்டர் அல்போன்ஸ், ஜெயந்தி நடராஜன்ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை அருகிலுள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தினர்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் சின்னமலை ராஜீவ் காந்தி சிலைக்கு மாலைஅணிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கோஷ்டித் தலைவர்களும் ராஜீவ் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அரசு சார்பில் மத நல்லிணக்க, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாதலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள், தலைமைச் செயலகஅதிகாரிகள் ஆகியோர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications