தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்துவோம்: சிவசேனா அறிவிப்பு
சென்னை:
சென்னையில் காவல்துறையின் தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடைபெறும்என்று சிவசேனா கட்சியினரும் இந்து மக்கள் கட்சியினரும் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 3 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை விநாயகர் சதுர்த்தி விழாகொண்டாடப்படும். அதன் பின் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்றுகடலில் கரைக்கப்படும்.
வழக்கமாக சென்னை விநாயகர் சிலை ஊர்வலத்தில் வன்முறை வெடிப்பதும்இந்து-முஸ்லீம் கலாட்டாவில் சிலர் உயிர் விடுவதும் சகஜம். அதே போல மிலாடி நபிஊர்வலத்தில் கலாட்டா, பேரணி, கொலைகள் நடக்கும்.
இதையடுத்து இந்த ஆண்டு சென்னை விநாயகர் ஊர்வலத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சென்னை நகர போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதற்கு சிவசேனை கட்சியும், இந்து மக்கள் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.போலீசார் தடையை மீறியும் விநாயகர் ஊர்வலம் நசைபெறும் என்று அவர்கள்கூறியுள்ளனர்.
இது குறித்து சிவசேனை கட்சியும், இந்து மக்கள் கட்சியும் தனித்தனியாக அறிக்கைவெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
விநாயகர் ஊர்வலத்திற்கு காவல்துறை விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டும்,.இல்லையென்றால் தடையை மீறியும் விநாயகர் ஊர்வலம் நடத்துவோம்.
விநாயகர் ஊர்வலத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.அதைவிட்டுவிட்டு ஊர்வலத்திற்கு காவல்துறை விதித்துள்ள தடையை நீக்குமாறுகாவல்துறைக்கு ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications