சட்டசபைக்கு குண்டு வைப்பேன் என்று மிரட்டவில்லை: திமுக எம்.எல்.ஏ. மறுப்பு
சென்னை:
சட்டசபைக் கட்டிடத்தைக் குண்டு வைத்து தகர்ப்பேன் என்று நான் கூறவில்லை, அதிமுக உறுப்பினர்கள் தான்என்னை சுட்டுவிடுவேன் என்று கூறினார்கள் என்று திமுக உறுப்பினர் அசோகன் கூறினார்.
இதை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் சபையைவிட்டு வெளியேறினார்கள். அப்போது திமுகஎம்.எல்.ஏ. அசோகன் என்பவர் சட்டசபையைக் குண்டு வைத்துத் தகர்த்து விடுவேன் என்று கூறியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாங்கள் அனைவரும் சபையை விட்டு அமைதியாக வந்து கொண்டிருந்தபோது அதிமுக உறுப்பினர்கள் தான்எங்களை நோக்கி ஓடிவந்தனர். பரிதி இளம்வழுதியைத் தாக்குவதற்காக பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும்ராஜாங்கம் போன்றவர்கள் ஓடிவந்தார்கள்.
அப்போது ஒரு எம்.எல்.ஏ., "வெளியே வந்தால் உங்களை எல்லாம் சுட்டுவிடுவேன்" என்று ஆத்திரத்துடன்கத்தினார். அதற்கு நான், "எங்கள் மீது வெடி குண்டு எரிந்தாலும் கவலைப்பட மாட்டோம்" என்று கூறினேன்.
அதைத் தான் நான் சட்டசபையை வெடி குண்டு வைத்து தகர்த்து விடுவேன் என்று சொன்னதாக அதிமுகவினர்திரித்துக் கூறிவிட்டனர். இவ்வாறு அசோகன் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications