For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் வீட்டில் மனித உரிமை மீறல்: 3 போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஸ்டாலினைக் கைது செய்யச் சென்றபோது, அவருடைய வீட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஸ்டாலின்கொடுத்த புகாரின் அடிப்படையில், 3 போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப மனித உரிமைகள் கமிஷன்உத்தரவிட்டுள்ளது.

மேம்பால ஊழல் வழக்கில் ஸ்டாலினை கைது செய்ய சென்ற போலீசார் அவரது வீட்டில் மனித உரிமையை மீறும்விதத்தில் நடந்து கொண்டதாக சென்னை மனித உரிமைகள் கமிஷனில் ஸ்டாலின் புகார் கொடுத்திருந்தார்.

போலீசார் மனித உரிமையை மீறும் விதமாத நடந்து கொண்டதாக, ஸ்டாலினின் மனைவி துர்கா மற்றும்ஸ்டாலினின் வீட்டில் பணியாற்றும் பணியாளர்களும், துணை மனு ஒன்றை சென்ற 8ம் தேதி தாக்கல் செய்து தங்கள்வாக்கமூலத்தை தெரிவித்திருந்தனர்,

இந்த மனு மீதான விசாரணை நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. நீதிபதிகள் சுவாமிதுரை மற்றும் சுசீலா ராஜ்ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர்.

போலீஸ் தரப்பில், டி.ஐ.ஜி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சார்பாக, பச்சையப்பன் மற்றும் ரகுநாதன் ஆகியவக்கீல்கள் ஆஜரானார்கள்.

அப்போது அவர்கள், "தங்களால் தற்போது விளக்கம் அளிக்க முடியாது மேலும் சில காலம் அவகாசம் தேவை"என்று கூறினர். "என்ன காரணம்?" என்று நீதிபதிகள் கேட்டபோது, "கடந்த 12ம் தேதி நடந்த திமுக பேரணியில்நடந்த வன்முறை காரணத்தால் தங்களால் இந்த வழக்குக்கு உரிய பதில் மனுவை தயாரிக்க முடியவில்லை"என்றனர்.

இதை ஏற்ற நீதிபதிகள் செப்டம்பர் மாதம் 6ம் தேதி போலீசார் தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்என்று கூறினர்.

கிண்டி துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், உதவி கமிஷனர் சமுத்திர பாண்டியன், வேளச்சேரி இன்ஸ்பெக்டர்தாண்டவராயன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஸ்டாலின் தரப்பில், கல்யாண சுந்தரம் மற்றும் ராஜா இளங்கோ ஆகியோரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X